சிபிஎம் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மறை வுக்கு இரங்கல் தெரிவித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் தினகரன் பிரிவு மாநிலப் பொது செயலாளர் எஸ்.தினகரன் விடுத்துள்ள இரங்கல்செய்தி வருமாறு:
கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர் என்.சங்கரய்யா மறைவு வருத்தம் அளிக்கிறது. அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, மிகுந்த எளிமை என்று வாழ்ந்தவர். அப்பழுக்கற்ற பெரும் தலைவர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் இணைந்து மதுரை மகாலட்சுமி மில் தொழிலா
ளர் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர். மறைந்த பார்வர்ட் பிளாக் தலைவர் மூக்கையா தேவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர். அவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு.
இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.